மனிதம் மரிக்கிறது....
மாயை சூழ் மாநிலத்தே
மனிதனாய் பிறந்து
மறை பெயர்ந்து
மறைகிறான் மனிதன்....
தொலைதூர மின்னலாய்
தொலைந்து போகிறான்...
பின்...
தேடி அலைகிறான்
தொலத்த சுவடுகளை....
தொலைத்தது நீதானே...
உனக்கு தெரியாதா முகவரிகள்..
குடை விலக்கி வான் நோக்கும்..
முகங்களில் எதிர்பார்ப்பு...
ஒரே ஒரு துளிக்கான வேண்டுதல்...
அந்த ஒரு துளியில் தான்
எனது வாழ்வின் தலையெழுத்து...
சக்கரவாகமாய்...
நான் அழிந்துபோகவா அளிக்கப்பட்டேன்
இந்த நட்டாழியில்...
இல்லையே....
வாழ்வதற்காகவே....
நான் வாழ்த்தப்பட்டேன்...
இந்த வையகத்தில்....
வறுமையும் எனக்கு வாராது,
வலிமையும் குன்றிப் போகாத
வரம் வேண்டும் எனக்கு....
நாம் மார் நிமிர்த்த வேண்டி..
தாம் நிலம் நோக்கும்வரை..
உழைத்த தனயன்கள்...
விட்டுசென்ற சுவடுகள் அழிக்கப்படுகின்றனவே...
நெஞ்சு பொறுக்குதில்லை....
இது அல்ல வாழ்வின் நியதி...
கடல் கொண்ட கட்டுமரமாய்
தத்தளிக்கிறது வாழ்க்கை...
எதிர் நீச்சல் போட விரும்புகிறேன்...
இயலவில்லை..
கண்களில் நீர் கொண்டு
கால்களில் ரணம் கண்டு
காட்டில் வாழ்க்கை...
இன்னும் மரித்து விடவில்லை
என் உணர்ச்சிகள்..
நான் வாழ வேண்டும்...
நன்றாக...
உலகு வியக்க...
என் போராட்டம் தொடரும்...
வாழ்வை வெல்ல...
மனிதம் ஜனனிக்க...
அன்றும் என் செத்துபோகாத உணர்ச்சிகளுடன்...
என்னை காப்பாற்றிக்கொள்ள
எனக்கு வலிமை உண்டு...
என் உணர்ச்சிகளுக்கு மட்டும்...
சாகா வரம் வேண்டும்....
வாழ்ந்திடுவேன் வாழ்வாங்கு...
இவ்வையகத்தே...
கார்த்திக் -
Thursday, December 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
//குடை விலக்கி வான் நோக்கும்..
முகங்களில் எதிர்பார்ப்பு...
ஒரே ஒரு துளிக்கான வேண்டுதல்...//
அருமையான வரிகள்.
அழகாக சொல்லியிருக்கீங்க கார்த்திக் கிருஷ்ணா.
வாழ்த்துக்கள்.
//"சாகா வரம்...."
//
:))
Excellent lines, great!!!
Thanks for following my blog......!!!
Arumai!
Thankxxxxx
////குடை விலக்கி வான் நோக்கும்..
முகங்களில் எதிர்பார்ப்பு...
ஒரே ஒரு துளிக்கான வேண்டுதல்...//
அருமையான வரிகள்.
அழகாக சொல்லியிருக்கீங்க கார்த்திக் கிருஷ்ணா.
வாழ்த்துக்கள்.//
நன்றி
புதியவன்
////"சாகா வரம்...."//
ஆம்..
சாகா வரம்..
//Excellent lines, great!!!//
thankx divya..
//Excellent lines, great!!!//
thankx divya..
Nalla irukku.
thankx Muniappan....
Post a Comment