நண்பா உன் முகவரி கூறு...
வான்மகள் காதல் கொண்டு
பூவுடல் சிலிர்க்க...
என்னை விழி வழி பெயர்த்தாள்..
மண் தொடும் யாத்திரையில் நான்...
சற்று இளைப்பாற...
புல்நுனியில் சிறு தூக்கம்...
நண்பா...
அவள் மோகம் தீர்க்க
என் குடில் புகுந்ததாள்..
இன்று நானும்...
உன்னைப்போலவே....
அனாதயாய்.....
கவலை வேண்டாம்....
சற்றுப் பொறுத்துக்கொள்...
அவள் காதலன் கண்திறக்கட்டும்...
என்னையும் மீண்டும் ஏற்றுக்கொள்வாள்...
உன் குடிலும் ஒளி பெறும்...
3 comments:
கவிதை அழகு...
கவிதைக்கு தலைப்பு ஏன் இல்லை...?
சூரிய சந்திப்பு ...
அழகு வரிகள்.
ஹ்ம்ம் அழகு கவிதை...
Post a Comment